வக்பு சட்டத்திருத்த மசோதா: ‛இண்டியா' கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு
வக்பு சட்டத்திருத்த மசோதா: ‛இண்டியா' கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு
UPDATED : ஆக 08, 2024 02:28 PM
ADDED : ஆக 08, 2024 01:52 PM

புதுடில்லி: வக்பு வாரியத்தில் திருத்தம் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவிற்கு ‛ இண்டியா' கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன
இம்மசோதா குறித்து லோக்சபாவில் அக்கட்சி எம்பிக்கள் பேசியதாவது:
தேர்தலை மனதில் வைத்து
அநீதி
சமாஜ்வாதி எம்.பி., பேசுகையில், குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக இம்மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. வக்பு வாரிய சொத்துகளை எடுக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இம்மசோதா மூலம் அரசியலமைப்பின் ஆன்மாவை கொல்ல முயற்சி செய்கிறது. முஸ்லிம் மக்களுக்கு ஏன் அநீதி இழைக்கிறீர்கள். அவர்களின் சுதந்திரத்தில் ஏன் தலையிடுகிறீர்கள்?
அச்சம்
தி.மு.க.., எம்.பி., கனிமொழி பேசியதாவது : பார்லிமென்ட் வரலாற்றில் இந்நாள் துயரமான நாள். இம்மசோதா அரசியலமைப்புக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது. மத ரீதியிலான சுதந்திரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை பறிக்கக்கூடாது. பல்வேறு மொழி, மதம் உள்ளிட்டவற்றை கொண்ட நமது மதச்சார்பற்ற நாடு என்ற பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 25,26 ஐ மீறுவதாக இம்மசோதா உள்ளது.முஸ்லிம் இல்லாதவரை வக்பு வாரியங்களில் இடம்பெறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து கொண்டு வரப்பட்டு உள்ளது. சொத்துகள் யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிப்பது குறித்த அச்சம் உருவாகி இருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை மீறுவதாக உள்ளது. ஹிந்து கோயில் தொடர்பானவற்றில பிற மதத்தவரை அனுமதிப்பீர்களா? குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை உறுப்பினர்களாக எப்படி சேர்க்க முடியும்
தவறு
அதிகாரம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது பஷீர் பேசுகையில் அனைத்து அதிகாரங்களும் மாவட்ட கலெக்டர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மதசார்பற்ற தன்மையை பாதிக்கும்