sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சட்டசபை தேர்தல் விதிமீறல் ஸ்ரீராமுலுவுக்கு எச்சரிக்கை

/

சட்டசபை தேர்தல் விதிமீறல் ஸ்ரீராமுலுவுக்கு எச்சரிக்கை

சட்டசபை தேர்தல் விதிமீறல் ஸ்ரீராமுலுவுக்கு எச்சரிக்கை

சட்டசபை தேர்தல் விதிமீறல் ஸ்ரீராமுலுவுக்கு எச்சரிக்கை


ADDED : பிப் 24, 2024 05:29 AM

Google News

ADDED : பிப் 24, 2024 05:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : கடந்த சட்டசபை தேர்தலின் போது விதிமுறை மீறிய ஸ்ரீராமுலு மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், 'விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் பிடிவாரன்ட் பிறக்கப்படும்' என எச்சரித்துள்ளது.

கடந்தாண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல், பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து, அமைச்சராக இருந்த ஸ்ரீராமுலு ஊர்வலம் நடத்தினார். இது தொடர்பாக, தேர்தல் அதிகாரி, ஏப்., 28 ம் தேதி போலீசில் புகார் அளித்தார்.

இவ்வழக்கு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீராமுலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு, நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம், 'இவ்வழக்கில் உங்கள் மனுதாரர், நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளாரா' என்றார். வழக்கறிஞர், 'இல்லை' என்றார்.

மீண்டும் நீதிபதி, 'விசாரணை நீதிமன்றம் நோட்டீஸ் அல்லது சம்மன் அனுப்பப்பட்டதா. எத்தனை முறை அனுப்பப்பட்டது' என்றார்.

வழக்கறிஞர், 'நான்கு முறை' என்றார்.

இதனால் கோபமடைந்த நீதிபதி, 'உங்களின் நடவடிக்கையால் நீதிமன்றம் மகிழ்ச்சியாக உள்ளது என்று அர்த்தமா. உங்கள் மனுதாரர், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் என்ன தடை உள்ளது. நீதிமன்றம் என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்.

'மனுதாரருக்கு அடுத்த விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பவும். நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால், அவருக்கு கைது வராண்ட் பிறப்பிக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us