sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'மழைநீர் சேமிப்பு திட்டத்தால் தண்ணீர் பிரச்னை தீர்க்கலாம்'

/

'மழைநீர் சேமிப்பு திட்டத்தால் தண்ணீர் பிரச்னை தீர்க்கலாம்'

'மழைநீர் சேமிப்பு திட்டத்தால் தண்ணீர் பிரச்னை தீர்க்கலாம்'

'மழைநீர் சேமிப்பு திட்டத்தால் தண்ணீர் பிரச்னை தீர்க்கலாம்'

1


ADDED : மார் 17, 2024 07:32 AM

Google News

ADDED : மார் 17, 2024 07:32 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: அடுக்குமாடி குடியிருப்புகள் மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தினால், தண்ணீர் பிரச்னையை தீர்க்கலாம் என்று, குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் யோசனை வழங்கி உள்ளார்.

பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமைப்பு நேற்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் பேசியதாவது:

பெங்களூரு கடந்த 15 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கு நிகரான வளர்ச்சியை கண்டு உள்ளது. நாட்டில் அதிக மக்கள் கொண்ட நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1.40 கோடி மக்களுக்காக தினமும் 145 கோடி லிட்டர், காவிரி நீர் வழங்கி வருகிறோம்.

ஆழ்துளை கிணறுகள் மூலமும் மக்கள் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்திய மக்கள், காவிரி நீரை நம்பி உள்ளனர். இதனால் எங்களுக்கு பொறுப்பு அதிகரித்து உள்ளது.

1,700 டேங்கர்கள் பதிவு


நகருக்கு தேவையான தண்ணீரை வழங்க, குடிநீர் வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது. எதிர்கால நலன்கருதி மழைநீரை சேமிப்பது மிகவும் அவசியம். பல அடுக்குமாடி குடியிருப்புகளில், மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என்பது, தெரிய வந்து உள்ளது.

மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தினால், தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். மழைநீரை சேமிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளே, தரமான அடுக்குமாடி குடியிருப்பு என அங்கீகரிக்க முடிவு செய்து உள்ளோம்.

தண்ணீர் வினியோகம் செய்ய 1,700 டேங்கர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த டேங்கர்களில் தண்ணீர் கட்டண பட்டியல், தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து தயாரிக்கப்படும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மற்றவர்களுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முதல்வர் பட்ஜெட்டில் அறிவித்து உள்ளார். ஏப்ரல் 1 ம் தேதி முதல் அதிகாரபூர்வ சுற்றறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்பேசினார்.






      Dinamalar
      Follow us