sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சோகம் இருக்கு... ஓணம் எதற்கு...: பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரளா

/

சோகம் இருக்கு... ஓணம் எதற்கு...: பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரளா

சோகம் இருக்கு... ஓணம் எதற்கு...: பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரளா

சோகம் இருக்கு... ஓணம் எதற்கு...: பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரளா

31


UPDATED : ஆக 09, 2024 03:00 PM

ADDED : ஆக 09, 2024 02:01 PM

Google News

UPDATED : ஆக 09, 2024 03:00 PM ADDED : ஆக 09, 2024 02:01 PM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலையில் சூரல்மலை, மேப்பாடு, முண்டக்கை ஆகிய 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் மண்ணில் புதைந்தனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன, 152 பேரின் நிலை தெரியவில்லை. 11வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்கிறது. பலியானவர்களில் சிலரின் உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்ததால், அவர்களின் டி.என்.ஏ.,வை வைத்து அடையாளம் காணும் பணிகள் நடைபெறுகிறது.

நிலச்சரிவில் சிக்கி இவ்வளவு உயிர்களை இழந்த சோகத்திற்கு இடையே கேரளாவில் செப்., 14 முதல் 17 வரை நடைபெற உள்ள ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்ய அம்மாநில சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து கேரள அரசு தரப்பில், வயநாடு நிலச்சரிவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாளை (ஆகஸ்ட் 10ம் தேதி) நடைபெறவிருந்த நேரு டிராபி படகுப் போட்டியை கேரள அரசு ரத்து செய்திருந்தது.






      Dinamalar
      Follow us