எந்த பாகுபாடும் கூடாது, முழு ஹிந்து சமூகமும் ஒன்றே: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
எந்த பாகுபாடும் கூடாது, முழு ஹிந்து சமூகமும் ஒன்றே: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
ADDED : ஜன 10, 2026 06:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரா: எந்த விதமான பாகுபாடும் இருக்கக்கூடாது, முழு ஹிந்து சமூகமும் ஒன்று என நாங்கள் நம்புகிறோம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறி உள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் மதுராவில் கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது
சமுதாயத்தில் எந்த விதமான பாகுபாடும் இருக்கக்கூடாது. நாம் வாழும் சமூகத்தை நாம் ஒன்றாகவே கருதுகிறோம். முழு ஹிந்து சமூகமும் ஒன்று என நாங்கள் நம்புகிறோம்.
ஆனால் உலகமோ அதில் மொழி, ஜாதி, பிரிவு, சமூகம் போன்ற பல பிரிவுகளைக் காண்கிறது. உலகம் அங்கீகரிக்கும் அத்தனை வகையான ஹிந்துக்களிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்கிறோம், ஒன்றாக உண்டு பருகுகிறோம். இன்பத்திலும் துன்பத்திலும் துணையாக நிற்கிறோம். அவர்களை நண்பர்களாகவே நடத்துகிறோம்.
இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

