ADDED : டிச 07, 2024 01:59 AM
புதுடில்லி,
''பயங்கரவாத நடவடிக்கைகளை, இன்றைய இந்தியா துளியும் சகித்துக் கொள்ளாது. மும்பை பயங்கரவாத தாக்குதலை கைகட்டி வேடிக்கை பார்த்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போல நாங்கள் இருக்க மாட்டோம். பயங்கரவாதிகளுக்கு உடனுக்குடன் பதிலடி தருவோம்,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
'என்.டி.டி.வி.,' ஊடக நிறுவனத்தின், 'இந்தியன் ஆப் தி இயர்' விருது வழங்கும் விழாவில் நேற்று பங்கேற்ற நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
மும்பையில், 2008, நவ., 26ல் பாகிஸ்தானின் லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வேடிக்கை பார்த்தது. ஆனால் இன்றைக்கு நிலைமையே வேறு. ராணுவ விவகாரங்களில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் அணுகுமுறை, முன்பு இருந்ததை அடியோடு மாற்றியுள்ளது.
மும்பை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் அன்றைய அரசு மவுனம் காத்தது. ஆனால், உரி மற்றும் பாலகோட் தாக்குதல் வாயிலாக பாகிஸ்தானுக்கு நாம் பதிலடி கொடுத்தோம்.
பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றைய இந்தியா துளியும் சகித்துக் கொள்ளாது. மும்பை பயங்கரவாத தாக்குதலை கைகட்டி வேடிக்கை பார்த்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போல நாங்கள் இருக்க மாட்டோம். உடனுக்குடன் பதிலடி தருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.