கோல்கட்டாவில் குண்டு வெடிப்பு: குப்பை சேகரித்தவர் காயம்: என்.ஐ.ஏ.,விசாரணை
கோல்கட்டாவில் குண்டு வெடிப்பு: குப்பை சேகரித்தவர் காயம்: என்.ஐ.ஏ.,விசாரணை
UPDATED : செப் 14, 2024 06:37 PM
ADDED : செப் 14, 2024 06:32 PM

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் நடந்தகுண்டுவெடிப்பு சம்பவத்தில் குப்பை சேகரித்த நபர் காயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குவங்க மாநிலம் மத்திய கோல்கட்டா நகரின் புலோச்சமான் நகரில் உள்ள எஸ்.என். பானர்ஜி சாலையில் குப்பை மேடு உள்ளது.அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் அங்கு குப்பை சேகரித்துக்கொண்டிருந்த 54 வயது நபர் காயமடைந்தார்.
தகவலறிந்து வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சம்பவ இடத்திற்கு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கோல்கட்டாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான சம்பவத்திற்கு நீதி கேட்டு டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.