மேற்குவங்கம், அசாமில் திரிணமுல் காங்., தனித்து போட்டி ?
மேற்குவங்கம், அசாமில் திரிணமுல் காங்., தனித்து போட்டி ?
ADDED : பிப் 23, 2024 09:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: லோக்சபா தேர்தலில் மேற்குவங்கம், அசாமில் காங்., கூட்டணி இல்லை எனவும், திரிணமுல் - காங். தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் ‛‛இண்டியா'' கூட்டணி அமைத்துள்ளன. இதில் தேசிய கட்சியான காங்., கட்சியும் உள்ளது.இந்நிலையில் மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்., - காங்., கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக திரிணாமுல் காங், தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று மற்றொரு மாநிலமான அசாம் மாநிலத்திலும் திரிணாமுல் காங்., தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.