sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டது ஏன்: கேட்கிறார் சிதம்பரம்

/

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டது ஏன்: கேட்கிறார் சிதம்பரம்

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டது ஏன்: கேட்கிறார் சிதம்பரம்

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டது ஏன்: கேட்கிறார் சிதம்பரம்

22


ADDED : ஜூலை 29, 2025 10:06 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 10:06 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கும் போது போர் நிறுத்தத்துக்கு ஓப்புக் கொண்டது ஏன்?'' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

ராஜ்யசபாவில், 'ஆபரேஷன் சிந்தூர்' மீதான விவாதத்தில் சிதம்பரம் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வலிமையானதா என கேட்டால் ஆமாம் என்பேன். அது வெற்றிகரமானதா என கேட்டால் ஆமாம் என்பேன். இது தீர்க்கமானதா எனக்கேட்டால், அதற்கு காலம் தான் பதில் கூறும் என்பேன். பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை வெற்றிகரமானதாக சென்று கொண்டு இருந்த போது போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டது ஏன்?

பாகிஸ்தானும், சீனாவும் தனித்தனி முனைகள் அல்ல. அவை இரண்டும் இணைந்த முனைகள் தான். இணைந்த முனைகளை எதிர்கொள்ள அரசிடம் திட்டம் உள்ளதா? ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க பல்வேறு வெளிநாடுகளுக்கு குழுக்கள் அனுப்பப்பட்ட நிலையில் இலங்கை, மியான்மர், நேபாளம் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அப்படி குழுவை அனுப்பாதது ஏன்?

பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடவில்லை. இவ்வாறு சிதம்பரம் பேசினார்.






      Dinamalar
      Follow us