sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எல்லையில் போர் பதற்றம் நிலவும் வேளையிலும் பீஹார் மீது பிரதமர் தனி கவனம் செலுத்துவது ஏன்?

/

எல்லையில் போர் பதற்றம் நிலவும் வேளையிலும் பீஹார் மீது பிரதமர் தனி கவனம் செலுத்துவது ஏன்?

எல்லையில் போர் பதற்றம் நிலவும் வேளையிலும் பீஹார் மீது பிரதமர் தனி கவனம் செலுத்துவது ஏன்?

எல்லையில் போர் பதற்றம் நிலவும் வேளையிலும் பீஹார் மீது பிரதமர் தனி கவனம் செலுத்துவது ஏன்?

1


ADDED : மே 02, 2025 11:45 PM

Google News

ADDED : மே 02, 2025 11:45 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஹாருக்கு இந்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, பா.ஜ.,வை சேர்ந்த முதல்வரை ஆட்சியில் அமர செய்ய வேண்டும் என பிரதமர் மோடி உறுதியாக இருப்பதால், சமீபகாலமாக அவர் பீஹார் மீது தனி கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த இரண்டாவது நாள், அரசு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக பீஹாரின் மதுபானி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த தாக்குதல் தொடர்பாக முதல்முறையாக வாய் திறந்தார்.

'தாக்குதல் நடத்திய பாக்., பயங்கரவாதிகளும், அவர்களை ஆட்டிவைப்பவர்களும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கடுமையான தண்டனையில் இருந்து தப்ப முடியாது' என்ற அழுத்தமான தகவலை, இந்த உலகமே உணரும் வகையில் ஆங்கிலத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில், பீஹாரின் பாடலிபுத்ராவில் நடக்கும், 'கேலோ இந்தியா' எனப்படும், இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் நாளை துவக்கி வைக்கிறார்.

முதலில் அவர் நேரில் சென்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாகவே இருந்தது. பாக்., உடனான போர் பதற்றம் காரணமாக அதில் மாற்றம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பீஹார் மக்களுக்கு மோடி நிச்சயம் உரையாற்றுவார் என கூறப்படுகிறது.

பிரதமருக்கு பீஹார் மீது ஏன் இந்த சிறப்பு கவனம் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் உலா வரத்துவங்கியுள்ளன. ''காரணத்தை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்,'' என்கிறார், அரசியல் விமர்சகர் அஜய் குமார்.

அவர் மேலும் கூறியதாவது:

பீஹார் சட்டசபைக்கு வரும், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. ஹிந்தி பேசும் மாநிலங்களில், பீஹாரில் மட்டும் தான் முதல்வர் அரியாசனம் பா.ஜ., வசம் வரவில்லை.

கடந்த, 2020 சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வும், ஐக்கிய ஜனதா தளமும் கைகோர்த்து தேர்தலை சந்தித்தன. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான, 122 என்ற எண்ணை அக்கட்சியால் எட்ட முடியவில்லை.

அதே நேரத்தில் பா.ஜ., அதிக தொகுதியில் வென்ற போதிலும், முதல்வர் இருக்கையை நிதிஷ் குமாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த முறை அந்த தவறை செய்துவிடக்கூடாது என்பதில் பா.ஜ., தலைமை உறுதியாக உள்ளது.

தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி வெற்று, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சியை அமைக்கவும், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வரை ஆட்சியில் அமர செய்வதிலும் மோடி உறுதியாக உள்ளார். எனவே தான், எல்லையில் பதற்றம் நிலவும் வேளையில் கூட, பீஹார் மீது தனி கவனம் செலுத்துகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us