sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தாங்க.. ரூ.100! பிரதமர் மோடிகிட்ட குடுத்துடுங்க! வைரல் ஆனது பழங்குடியின பெண் செயல்

/

இந்தாங்க.. ரூ.100! பிரதமர் மோடிகிட்ட குடுத்துடுங்க! வைரல் ஆனது பழங்குடியின பெண் செயல்

இந்தாங்க.. ரூ.100! பிரதமர் மோடிகிட்ட குடுத்துடுங்க! வைரல் ஆனது பழங்குடியின பெண் செயல்

இந்தாங்க.. ரூ.100! பிரதமர் மோடிகிட்ட குடுத்துடுங்க! வைரல் ஆனது பழங்குடியின பெண் செயல்

6


ADDED : அக் 20, 2024 05:57 PM

Google News

ADDED : அக் 20, 2024 05:57 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனேஸ்வர்; ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ.100 அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசாவில் உள்ள சுந்தர்கர்க் மாவட்டத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு சிவப்பு நிற ஆடை அணிந்தபடி, பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்துள்ளார்.

உறுப்பினர் சேர்க்கை முகாமில் நின்று கொண்டிருந்த ஒடிசா மாநில பா.ஜ., துணைத்தலைவர் பைஜெயந்த் ஜெய்பாண்டாவிடம் சென்றுள்ளார். தாம் கையில் வைத்திருந்த 100 ரூபாயை அவரிடம் தந்துள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறி, அவரிடம் இந்த ரூ.100ஐ வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

பழங்குடியின பெண்ணின் இந்த செயலைக் கண்டு வியந்த பைஜெயந்த் ஜெய் பாண்டா இந்நிகழ்வை தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் விரிவாக பதிவிட்டு உள்ளார். பழங்குடியின பெண் ரூ.100 தரும் போட்டோவையும் அதில் வெளியிட்டு இருக்கிறார்.

தமது எக்ஸ் வலைதள பதிவில் அவர் கூறி இருப்பதாவது; ஒடிசா சுந்தர்கர்க் மாவட்டத்தில் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அங்கு வந்த ஒடிசா ஆதிவாசிப் பெண் ஒருவர் 100 ரூபாயை பிரதமரிடம் தருமாறு கூறினார். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்பதையும் கூறுமாறு தெரிவித்தார்.

அந்த பணத்தை நான் வேண்டாம் என்று கூறி விளக்கினேன். ஆனால் அப்பெண்மணி அதை மறுத்துவிட்டார். பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவே இல்லை. இதுதான் ஒடிசா மற்றும் பாரதம் உணரும் மாற்றத்தின் பிரதிபலிப்பு. ஜெய் ஜெகன்நாத் என்று பதிவிட்டுள்ளார்.

பைஜெயந்த் ஜெய்பாண்டாவின் வலைதள பதிவுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். அவர் தமது பதிவில் கூறி உள்ளதாவது:

இந்த அன்பு என் உள்ளத்தை நெகிழ செய்துவிட்டது. எப்போதும் ஆசிர்வதிக்கும் உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன். உங்களின் ஆசி வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்வேகத்தை எனக்கு தருகிறது.

இவ்வாறு தமது பதிவில் பிரதமர் மோடி கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us