UPDATED : மே 07, 2025 10:22 AM
ADDED : மே 07, 2025 06:34 AM

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இன்று (மே: 07) நள்ளிரவு இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்கள் நடத்தியது.
இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள் 26 பேர் பலியானார்கள், மேலும் 55 பேர் காயம் அடைந்தனர். இந்த அதிரடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் பலியானார்கள். அதில் அப்பாவி ஹிந்து பெண்கள் பலர் தங்கள் கணவனை இழந்தனர். சிந்தூர் என்றால் பொட்டுஅல்து திலகம் என்று பொருள். அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் கணவனை இழந்த ஹிந்து பெண்கள் தங்கள் பொட்டினை இழந்ததால் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலுக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற இப்பெயரினை பிரதமர் மோடி அங்கீகரித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன