sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது

/

கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது

கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது

கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது


ADDED : ஜன 01, 2025 12:38 AM

Google News

ADDED : ஜன 01, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன்: கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததால் கணவரை கொன்று உடலை எரித்த, மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.

ஹாசன் அரிசிகெரே அருகே திருப்தி கிராசில், கடந்த 15ம் தேதி பாதி உடல் கருகிய நிலையில், ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த நபர், அரிசிகெரே டவுனில் வசித்த முசாமில், 35 என்பது தெரிந்தது. அவரை யாரோ கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததும் தெரிந்தது.

முசாமில் இறப்பில் அவரது மனைவி பாத்திமா, 34 மீது சந்தேகம் இருப்பதாக, குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். இதனால் பாத்திமாவை போலீசார் கண்காணித்தனர். அவரது மொபைல் அழைப்புகளையும் ஆய்வு செய்தனர். யாசின், 35 என்பவருடன் அடிக்கடி பேசியது தெரிந்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இருவரையும் பிடித்து, போலீசார் விசாரித்தனர். கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததால், முசாமிலை அழைத்து சென்று கல்லால் தாக்கி கொன்று, பின், பெட்ரோல் ஊற்றி உடலை எரித்ததை ஒப்புக்கொண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us