sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வெப்பம் அதிகரிப்பால் நீர்நிலைகளை தேடி படையெடுக்கும் வன விலங்குகள்

/

வெப்பம் அதிகரிப்பால் நீர்நிலைகளை தேடி படையெடுக்கும் வன விலங்குகள்

வெப்பம் அதிகரிப்பால் நீர்நிலைகளை தேடி படையெடுக்கும் வன விலங்குகள்

வெப்பம் அதிகரிப்பால் நீர்நிலைகளை தேடி படையெடுக்கும் வன விலங்குகள்


ADDED : ஏப் 02, 2025 03:13 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்ததால், குடிநீருக்காக நீர்நிலைகளை தேடி வனவிலங்குகள் படையெடுத்து வருகின்றன.

இம்மாவட்டத்தில் கோடை துவங்கியது முதல் வெப்பம் அதிகரித்தது. தவிர மாவட்டத்தில் ஊதா நிற கதிர்வீச்சு 10 புள்ளிகள் வரை அதிகரித்ததால் வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது. அதனால் வெயிலில் வேலை செய்வோர் உள்பட பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியதுடன் காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை கவனமாக இருக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

வெப்பத்தால் வனம், காடு, புல் வெளிகள் கருகி, நீர்நிலைகளும் வறண்டு விட்டன. அதனால் தீவனம், குடிநீர் தேடி யானை, காட்டுமாடு உள்பட வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி வருகின்றன.

ஏற்கனவே மூணாறு, சின்னக்கானல், ஆனயிறங்கல் உள்பட பல பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது அவை குடிநீர் தேடி மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தேடி படையெடுத்து வருகின்றன. அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனம், காடு ஆகியவற்றில் தீவனங்களுக்கு ஏற்பாடு செய்து தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us