ஜாமின் கிடைக்குமா ? உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
ஜாமின் கிடைக்குமா ? உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
ADDED : ஆக 09, 2024 02:14 AM

துடில்லி: மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் கோரிய மணீஷ் சிசோடியா அப்பீல் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கிறது.
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் டில்லி ஆம் ஆத்மி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதில் நடந்துள்ள பணமோசாடி தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.
இவர் மீதான வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஜாமின் கோரிய மனுக்கள் தள்ளுபடியானதையடுத்து, டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனுவும் கடந்த மே 21-ம் தேதி தள்ளுபடியானது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜாமின் மனுவை கடந்த 6-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இந்த வக்கில் இன்று (ஆக.09) முக்கிய தீர்ப்பை வெளியிடுகிறது உச்சநீதிமன்றம் .