sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்

/

தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்

தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்

தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்

7


ADDED : மே 05, 2025 09:28 AM

Google News

ADDED : மே 05, 2025 09:28 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: ''தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிப்பேன். இனி கூட்டணி மாற மாட்டேன்'' என பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் உறுதி அளித்துள்ளார்.

பீஹாரில் உள்ள 243 தொகுதிகளுக்கும் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பீஹார் முதல்வராக நிதீஷ் குமார் உள்ளார். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைத்து உருவாக்க உதவிய இண்டி கூட்டணியைக் கைவிட்டு, நிதீஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்பினார்.

இந்நிலையில், பீஹாரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் நிதீஷ் குமார் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிப்பேன், இனி கூட்டணி மாற மாட்டேன். எப்போதும் இங்கேயே இருப்பேன். எனது கட்சி என்னை இரண்டு முறை இங்கும் அங்கும் செல்ல வைத்தது.

ஆனால் இது மீண்டும் நடக்காது. என்னை (முதல்வராக) ஆக்கியது யார்? அது வாஜ்பாய்தான். இவ்வாறு அவர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் பல முறை கூட்டாளிகளை மாற்றிக் கொண்ட, மிக நீண்ட காலம் முதல்வராக இருக்கிறார் நிதீஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us