sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விளைச்சல் குறைந்ததால் தானியங்களின் விலை உயரும்?

/

விளைச்சல் குறைந்ததால் தானியங்களின் விலை உயரும்?

விளைச்சல் குறைந்ததால் தானியங்களின் விலை உயரும்?

விளைச்சல் குறைந்ததால் தானியங்களின் விலை உயரும்?


ADDED : பிப் 08, 2024 05:27 AM

Google News

ADDED : பிப் 08, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: வறட்சி காரணமாக, மாநிலத்தில் உணவு தானியங்கள் விளைச்சல் குறைந்துள்ளது. எனவே கேழ்வரகு, மக்காச்சோளம், கடலைக்காய், துவரம் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கர்நாடகாவில் 2023ல், மழைக்காலத்தில் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை. 200க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டன. தண்ணீர் பற்றாக்குறையால், விளைச்சல் பாழாகின. விவசாயிகள் இரண்டு முறை விதைத்தும், எதிர்பார்த்த அளவில் பலனளிக்கவில்லை.

கர்நாடகாவில், 2023ம் ஆண்டு 148.16 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விளைவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 92.87 மெட்ரிக் தானியங்கள் அறுவடையானது. 40 சதவீதத்துக்கும் அதிகமான உணவு தானியங்கள் விளைச்சல் குறைந்துள்ளது.

மழைப் பற்றாக்குறையால், அணைகளில் தண்ணீர் நிரம்பவில்லை. எனவே அணை நீர்ப்பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளில், விவசாயிகள் நெல் பயிரிடவில்லை.

எனவே அரிசி உற்பத்தி குறையும் வாய்ப்புள்ளது. அரிசி மட்டுமின்றி, மக்காச்சோளம், கடலைக்காய், கேழ்வரகு, துவரம் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விளைச்சல் குறைந்ததால், வரும் நாட்களில் விலை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us