sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோவிலுக்கு துப்பாக்கியுடன் வந்த பெண் கைது

/

கோவிலுக்கு துப்பாக்கியுடன் வந்த பெண் கைது

கோவிலுக்கு துப்பாக்கியுடன் வந்த பெண் கைது

கோவிலுக்கு துப்பாக்கியுடன் வந்த பெண் கைது


ADDED : மார் 19, 2025 03:53 AM

Google News

ADDED : மார் 19, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு : டில்லியைச் சேர்ந்தவர் ஜோதி குப்தா. ஓய்வுபெற்ற போலீஸ் கான்ஸ்டபிளான இவர், ஜம்மு - காஷ்மீரின் ரேசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி மலைக்கோவிலுக்கு தரிசனத்துக்காக சமீபத்தில் வந்தார்.

அப்போது, அக்கோவில் அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் அவரது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர்.

இதில், அவரது பையில் கைத்துப்பாக்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அதை பறிமுதல் செய்தனர். அந்த துப்பாக்கியில் ஆறு குண்டுகள் இருந்தன.

பக்தர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக, ஜோதி குப்தா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரது துப்பாக்கிக்கான உரிமமும் காலாவதியானது கண்டறியப்பட்டது.






      Dinamalar
      Follow us