ADDED : ஜூலை 27, 2025 08:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:வட கிழக்கு டில்லி, நியூ உஸ்மான்பூர் பகத்சிங் காலனியில் வசிக்கும் மஞ்சு ஜெயின், 40, வீட்டில் நேற்று காலை, 7:00 மணிக்கு தீப்பற்றியது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர், வீட்டுக்குள் சிக்கித் தவித்த மஞ்சுவை காயங்களுடன் மீட்டு, அருகில் உள்ள ஜெகபிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள், மஞ்சு ஜெயின் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதுகுறித்து, நியூஉஸ்மான்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.