sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2 குழந்தைகளை கொன்ற பெண் சிறையில் அடைப்பு

/

2 குழந்தைகளை கொன்ற பெண் சிறையில் அடைப்பு

2 குழந்தைகளை கொன்ற பெண் சிறையில் அடைப்பு

2 குழந்தைகளை கொன்ற பெண் சிறையில் அடைப்பு


ADDED : நவ 22, 2024 10:17 PM

Google News

ADDED : நவ 22, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா:ஆறு வயது மகள் மற்றும் நான்கு வயது மகன் ஆகிய இருவரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

நொய்டாவின் பாதல்பூர் அருகே கெதா தரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனம். இவருக்கு 2017ல் சாஹில் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால், பெற்றோர் செய்து வைத்த அந்தத் திருமணத்தில், சோனத்துக்கு விருப்பம் இல்லை. இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், 2021ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் சாஹில் சிறைக்குச் சென்றார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சோனு என்பவருடன் சோனம் சேர்ந்து வாழ்ந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்த சாஹில், மீண்டும் தன்னுடம் வந்து விடுமாறு கூறினார். சாஹில் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் கடும் அழுத்தத்தில் இருந்த சோனம், நேற்று முன் தினம் 6 வயது மகள், 4 வயது மகன் ஆகிய இருவரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். மேலும், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

அக்கம்பக்கத்தினர் சோனத்தை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். சோனத்தை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உடற்கூறு ஆய்வுக்குப் பின், இரு குழந்தைகள் உடல்களும் சாஹிலிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us