sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புலி தாக்கி பெண் பலி

/

புலி தாக்கி பெண் பலி

புலி தாக்கி பெண் பலி

புலி தாக்கி பெண் பலி


ADDED : ஜன 24, 2025 11:47 PM

Google News

ADDED : ஜன 24, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வயநாடு: கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவர் அங்கு உள்ள பிரியதர்ஷினி எஸ்டேட் என்ற காபி தோட்டத்தில் தொழிலாளராக பணிபுரிந்தார்.

நேற்று காலை இவர் காபி இலைகளை பறிக்கச் சென்றபோது, தோட்டத்தில் பதுங்கியிருந்த புலி ராதாவை தாக்கியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புலியை உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்கும் வரை, உயிரிழந்த ராதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முடியாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் குவிக்கப்பட்டனர். மாநில எஸ்.சி., - எஸ்.டி., அமைச்சர் கிராமத்தினரை சந்தித்து சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று புலியை உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்க அரசு உத்தரவு பெற்று தந்தார். மேலும், வனவிலங்கு - மனித மோதலை தடுக்க அப்பகுதியில் வேலி அமைக்கப்படும் என்றார்.

இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப கிராம மக்கள் அனுமதித்தனர்.






      Dinamalar
      Follow us