sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

புதிய போப் தேர்வு செய்யும் பணி தீவிரம்; விரைவில் அறிவிக்க வாய்ப்பு

/

புதிய போப் தேர்வு செய்யும் பணி தீவிரம்; விரைவில் அறிவிக்க வாய்ப்பு

புதிய போப் தேர்வு செய்யும் பணி தீவிரம்; விரைவில் அறிவிக்க வாய்ப்பு

புதிய போப் தேர்வு செய்யும் பணி தீவிரம்; விரைவில் அறிவிக்க வாய்ப்பு

4


UPDATED : மே 08, 2025 09:51 PM

ADDED : மே 08, 2025 07:14 AM

Google News

UPDATED : மே 08, 2025 09:51 PM ADDED : மே 08, 2025 07:14 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோம்: போப் பிரான்சிஸ் இறந்த நிலையில், அடுத்த போப் யார் என்பதை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் புதிய போப் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், 88, இத்தாலியின் வாடிகன் சிட்டியில் ஏப்.,21ல் காலமானார். அவரது இறுதிச் சடங்கு செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது. போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியது.

புதிய போப்பை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. போப் தேர்வு செய்யப்பட்டார் என்பதை சிஸ்டைன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கியில் வெளியாகும் புகையின் நிறத்தை கொண்டு மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும். புகை போக்கியில் கறுப்பு நிற புகை வெளியானல் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், வெள்ளை நிற புகை வெளியானால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டார் என்றும் அர்த்தம்.

இந்நிலையில், நேற்று போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர். நேற்று நடந்த கூட்டத்தில், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை. அதை குறிக்கும் வகையில் இரவு 9.05 மணிக்கு புகைபோக்கியிலிருந்து கரும்புகை வெளியேற்றப்பட்டது.

ஓய்வு எடுக்கச் சென்ற கார்டினல்கள், இன்று 2வது முறையாக கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுவர். இந்த பணி புதிய போப் தேர்வு செய்யப்படும் வரை தொடரும்.






      Dinamalar
      Follow us