" உலகம் முழுவதும் பெருமை தரும் இந்திய கலாசாரம்: பிரதமர் மோடி
" உலகம் முழுவதும் பெருமை தரும் இந்திய கலாசாரம்: பிரதமர் மோடி
UPDATED : ஜூன் 30, 2024 01:06 PM
ADDED : ஜூன் 30, 2024 01:02 PM

புதுடில்லி: ‛‛ நமது கலாசாரம் உலகம் முழுவதும் பெருமை பெற்று வருகிறது'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
குவைத்தில் ஹிந்தி
துர்க்மெனிஸ்தானில் ரவிந்திரநாத் தாகூர் சிலை
நம் கலாச்சாரம் இன்று உலகம் முழுவதும் பெருமை பெற்று வருவதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். துர்க்மெனிஸ்தானில், அந்நாட்டு தேசிய கவிஞரின் 300வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் உலகில் தலைசிறந்த 24 கவிஞர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அதில் ரவிந்திரநாத் தாகூரின் சிலையும் ஒன்று.
கரீபிய நாடுகள்
இந்த மாதம், சூரினாம், செயின் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் ஆகிய நாடுகள் இந்திய பாரம்பரியத்தை முழு உற்சாகத்துடன் கொண்டாடின. சூரினாமில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், ஜூன்5 ம் தேதியை இந்திய வருகை தினமாக அனுசரித்தனர். அங்கு போஜ்பூரி, ஹிந்தி மொழி ஆகியவை பரவலாக பேசப்படுகின்றன. செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் நாடுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் நமது பாரம்பரியத்தை பெருமையாக நினைக்கின்றனர்.