sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உலக ஸ்கேட் சாம்பியன்ஷிப் ஹூப்பள்ளி மாணவி தேர்வு

/

உலக ஸ்கேட் சாம்பியன்ஷிப் ஹூப்பள்ளி மாணவி தேர்வு

உலக ஸ்கேட் சாம்பியன்ஷிப் ஹூப்பள்ளி மாணவி தேர்வு

உலக ஸ்கேட் சாம்பியன்ஷிப் ஹூப்பள்ளி மாணவி தேர்வு


ADDED : செப் 19, 2024 11:05 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இத்தாலியில் உலக ஸ்கேட் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஹூப்பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலியில், இம்மாதம் 18ம் தேதி துவங்கிய உலக ஸ்கேட் சாம்பியன்ஷிப் போட்டி, 22ம் தேதி வரை நடக்கிறது. இந்தியாவின் சார்பில், ஹூப்பள்ளியை சேர்ந்த ரோலர் டெர்பி ஸ்கேட்டிங் வீராங்கனை த்ரிஷா பிரவீணா ஜடாலா பங்கேற்றுள்ளார்.

தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று அங்கீகாரம் பெற்றவர் த்ரிஷா. ஹூப்பள்ளி கே.எல்.இ.ஜே.ஜி., கல்லுாரியில் பி.காம்., படித்து வரும் இவர், ஸ்கேட்டிங் மட்டுமின்றி கல்வியிலும் சிறந்து விளங்குகிறார்.

உலக ஸ்கேட் சாம்பியன்ஷிப்கள், உலகெங்கிலும் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள், உயர்-ஆக்டேன் நிகழ்வுகளின் தொடரில் போட்டியிடுகின்றனர்.

இதற்கு பதிலளித்த த்ரிஷா, ''இதுபோன்ற மதிப்புமிக்க மேடையில் இந்தியா சார்பில் பங்கேற்க வேண்டும் என்ற என் கனவு நனவானது.

எனது பெற்றோர், பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவிற்கு நான் நன்றி கூறுகிறேன். போட்டியில் எனது நாட்டை பெருமைப்படுத்துவேன் என்று நான் நம்புகிறேன்,'' என்றார்.

த்ரிஷாவின் தந்தை பிரவீன் ஜடாலா கூறுகையில், ''திரிஷாவின் தேர்வு, மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒரு உத்வேகம். அவரது கடின உழைப்பும் ஆர்வமும் உலக அரங்கில் வெற்றி பெறட்டும்,'' என்றார்.

-- நமது நிருபர் --






      Dinamalar
      Follow us