UPDATED : பிப் 03, 2026 07:21 PM
ADDED : பிப் 03, 2026 07:19 PM

இம்பால்: மணிப்பூர் மாநில பாஜ எம்எல்ஏக்கள் குழு தலைவராக யம்நம் கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக மெய்டி - கூகி பிரிவினர் இடையே கடந்த2023 மே மாதம் முதல் மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு புலம்பெயர்ந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜவை சேர்ந்த முதல்வர் பைரேன் சிங் பதவியில் இருந்து விலகினார். அங்கு தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலில்உள்ளது.மணிப்பூரில் பதற்றம் தணிந்து மெல்ல அமைதி திரும்பி கொண்டு உள்ளது.
இந்நிலையில் பாஜ எம்எல்ஏக்கள் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் யம்நம் கெம்சந்த் சிங் எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து விரைவில் மணிப்பூர் மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார்.

