sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஜி.எஸ்.டி., மோசடி: முதலிடத்தில் மும்பை!

/

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஜி.எஸ்.டி., மோசடி: முதலிடத்தில் மும்பை!

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஜி.எஸ்.டி., மோசடி: முதலிடத்தில் மும்பை!

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஜி.எஸ்.டி., மோசடி: முதலிடத்தில் மும்பை!

8


ADDED : செப் 15, 2024 12:22 PM

Google News

ADDED : செப் 15, 2024 12:22 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாட்டில் கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், ரூ.2.01 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை முதலிடத்தில் உள்ளது.

இது தொடர்பாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் ரூ.1 .01 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி நடந்தது. அதுவே 2023- 24ம் நிதியாண்டில் ரூ.2.01 லட்சம் கோடி ஆக அதிகரித்து உள்ளது.

இது குறித்த பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. அந்நகரில் ரூ.70,985 கோடி மோசடி நடந்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் டில்லி, புனே, குருகிராம் உள்ளன.டில்லியில் ரூ.18 , 313 கோடியும், புனே நகரில் ரூ.17,328 கோடியும், குருகிராம் நகரில் ரூ.15,502 கோடியும், ஹைதராபாத்தில் ரூ.11,081 கோடியும் வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளது.

துறை வாரியாக


ஆன்லைன் விளையாட்டில் ரூ.81,875 கோடி

வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு துறையில் ரூ.18,961 கோடி

இரும்பு, காப்பர், மற்றும் உலோக துறையில் ரூ .16,806 கோடி

பான் மசாலா, புகையிலை, பீடி,சிகரெட் ஆகியவற்றில் ரூ.5,794 கோடி

பணி ஒப்பந்த துறையில் ரூ.2,846 கோடி

பிளைவுட், டிம்பர் மற்றும் பேப்பர் ஆகியவற்றில் ரூ.1,196 கோடி

மின்னணு பொருட்களில் 1,165 கோடி

மார்பிள், கிரானைட் மற்றும் டைல்ஸ் ஆகியவற்றில் ரூ.315 கோடி

மருந்து துறையில் ரூ.40 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது.

ஜிஎஸ்டி ஏய்ப்பு தொடர்பாக 4,872 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் (2022- 23) 4,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us