sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மக்களை முட்டாள் ஆக்க முடியாது; பிரியங்காவுக்கு கங்கனா ரணாவத் பதிலடி

/

மக்களை முட்டாள் ஆக்க முடியாது; பிரியங்காவுக்கு கங்கனா ரணாவத் பதிலடி

மக்களை முட்டாள் ஆக்க முடியாது; பிரியங்காவுக்கு கங்கனா ரணாவத் பதிலடி

மக்களை முட்டாள் ஆக்க முடியாது; பிரியங்காவுக்கு கங்கனா ரணாவத் பதிலடி

2


ADDED : டிச 14, 2024 05:22 PM

Google News

ADDED : டிச 14, 2024 05:22 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சம்பல் பிரச்னையை வைத்து மக்களை முட்டாள்களாக்க முடியாது என்று காங்கிரசுக்கு பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,யான பிரியங்கா, பார்லிமென்ட்டில் முதல்முறையாக நேற்று தனது கன்னி உரையை ஆற்றினார். அவரது பேச்சை காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டி வந்த நிலையில், பா.ஜ., எம்.பி., கங்கனா ரணாவத் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: பிரச்னைகளை விட்டு விட்டு, கதைகளை பின்னி பேசியுள்ளார். யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து கொண்டு, குற்றச்சாட்டுக்களை கூறலாம். பார்லிமென்டில் ராகுல் மற்றும் பிரியங்காவின் பேச்சு ஒரே மாதிரியாகத் தான் இருந்தது. அதற்கு முன் அவர்களின் தாயார் இதுபோன்று பேசுவார். தங்களின் தாயை விட சிறப்பாக பேசியிருக்கிறோம் என்று அவர்கள் வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம்.

சம்பல் பிரச்னையை வைத்து மக்களை முட்டாள்களாக்க முடியாது. பிரச்னைகளை பற்றி பேச வேண்டும். உண்மையில், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சொந்த போராட்டங்களும், சவால்களும் இருக்கும். பிரியங்காவுக்கு பேசுவதற்கு ஏதுமில்லை. இதன் காரணமாகவே, நாட்டில் அச்சப்படும் சூழல் இருப்பதாகக் கூறி, மக்களை தூண்டுவிடுகிறார். அவரது கொள்கையில் பலவீனமானவர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அல்லது பா.ஜ., தலைவர்களுடன் விவாதம் நடத்த முடியாதவர், எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us