sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'ரத்தம் வரும் வரை பசுவின் மடியில் பால் கறக்க முடியாது'

/

'ரத்தம் வரும் வரை பசுவின் மடியில் பால் கறக்க முடியாது'

'ரத்தம் வரும் வரை பசுவின் மடியில் பால் கறக்க முடியாது'

'ரத்தம் வரும் வரை பசுவின் மடியில் பால் கறக்க முடியாது'


ADDED : டிச 11, 2024 11:36 PM

Google News

ADDED : டிச 11, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : வழக்கு விசாரணையை விரைவில் எடுத்துக் கொள்ளும்படி கூறி வழக்கறிஞர் சமர்ப்பித்த மனுவுக்கு, 'பசுவின் மடியில் ரத்தம் வரும் வரை பால் கறக்க முடியாது' என, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகரபிரசன்னா ஆதங்கப்பட்டார்.

கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கும் நீதிபதி என்று பெயர் பெற்றவர்.

நேற்று முன்தினம் இவர் முன் ஆஜரான வழக்கறிஞர், சமர்ப்பித்த மனுவில், 'தனது வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கும்படி, பல முறை விண்ணப்பித்துள்ளேன். விசாரணை இன்னும் துவங்கவில்லை. இம்முறை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.

இதை பார்த்த நீதிபதி நாகபிரசன்னா, 'கடந்த 29 நாட்களில், 7,500 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில், 5,500 மனுக்களை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளேன். எந்த வழக்குகளை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள். பசுவின் மடியில் இருந்து ரத்தம் வரும் வரை பால் கறக்க முடியாது' என ஆதங்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us