sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் திருட்டு காரில் இன்ஸ்டா காதலியுடன் டூர் சென்ற இளைஞர் கைது

/

கேரளாவில் திருட்டு காரில் இன்ஸ்டா காதலியுடன் டூர் சென்ற இளைஞர் கைது

கேரளாவில் திருட்டு காரில் இன்ஸ்டா காதலியுடன் டூர் சென்ற இளைஞர் கைது

கேரளாவில் திருட்டு காரில் இன்ஸ்டா காதலியுடன் டூர் சென்ற இளைஞர் கைது


ADDED : ஜூலை 17, 2025 03:05 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:கேரளாவில் திருட்டு காரில் இன்ஸ்டா காதலியுடன் ஜாலியாக டூர் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழா அருகே கருட்டுக்காவு பகுதியில் கடந்த நான்காம் தேதி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் காணாமல் போனது. இது குறித்து மூவாற்றுப்புழா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கேரளாவில் அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் கார் மாடல் மற்றும் பதிவு எண் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் ஒரு வணிக வளாகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை போலீசார் ஆய்வு செய்தபோது பதிவு எண் மாற்றப்பட்டு காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது தெரியவந்தது. போக்குவரத்து அதிகாரியின் உதவியுடன் அந்த பதிவு எண்ணை சோதித்த போது அது போலி என்பது தெரியவந்தது.

காரில் வந்த முகம்மது அல் சாபித் என்ற இளைஞரை விசாரித்தபோது மூவாற்றுப்புழாவில் காணாமல் போன கார் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் அக்காரை கடத்தி தனது இன்ஸ்டாவில் அறிமுகமான காதலியுடன் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார். கைது செய்யபட்ட இளைஞர் மூவாற்றுப்புழா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us