sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹார் இடைத்தேர்தலில் பூஜ்ஜியம்; சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம்; நம்பிக்கையுடன் சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்!

/

பீஹார் இடைத்தேர்தலில் பூஜ்ஜியம்; சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம்; நம்பிக்கையுடன் சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்!

பீஹார் இடைத்தேர்தலில் பூஜ்ஜியம்; சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம்; நம்பிக்கையுடன் சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்!

பீஹார் இடைத்தேர்தலில் பூஜ்ஜியம்; சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம்; நம்பிக்கையுடன் சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்!

3


ADDED : நவ 25, 2024 02:54 PM

Google News

ADDED : நவ 25, 2024 02:54 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 'எனது கட்சி 2025ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்' என தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் நம்பிக்கை தெரிவித்தார்.

பீஹார் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் 4 தொகுதியிலும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் பிஹாரி சமூகத்தினர் மத்தியில் பேசியதாவது: பீஹார் உண்மையில் தோல்வி அடைந்த மாநிலம். மாநில வளர்ச்சிக்கு மிகப்பெரிய முயற்சிகள் தேவை. எனது கட்சி 2025ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது கணிப்பு படி நாங்கள் வெற்றி பெறுவோம்.

2030ம் ஆண்டிற்குள் பீஹாரை நடுத்தர வருமானம் கொண்ட மாநிலமாக மாற்றுவது ஒரு பெரிய சவாலாக இருக்கும். பீஹார் மாநிலத்தில் வளர்ச்சியை உருவாக்க வேண்டும். பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்கு எனது கட்சி முன்னுரிமை அளிக்கும். இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தாலும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனது கட்சி செய்த நல்ல விஷயங்கள் இறுதியில் பலனை தரும். தற்போதைய மதுவிலக்கு பயனற்றது. மதுவிலக்கு ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us