sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மண்டல காலம் நிறைவு

/

மண்டல காலம் நிறைவு

மண்டல காலம் நிறைவு

மண்டல காலம் நிறைவு


ADDED : டிச 27, 2024 02:40 AM

Google News

ADDED : டிச 27, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை:சபரிமலையில் நேற்று நடைபெற்ற மண்டல பூஜையுடன் 41 நாட்கள் நடைபெற்ற மண்டலகாலம் நிறைவுபெற்று நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச., 30 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த மண்டல காலத்தின் நிறைவாக நேற்று மதியம் 12:20 மணிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக காலை 11:00 மணிக்கு நெய்யபிஷேகம் நிறுத்தப்பட்டு கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டது.

தொடர்ந்து 108 கலசாபிஷேகமும், களபாபிஷேகமும் நடைபெற்றது. வெள்ளி சந்தன குடத்தை மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி எடுத்து கோயிலை வலம் வந்தார். தொடர்ந்து மூலவருக்கு சந்தன அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து தங்க அங்கி மற்றும் அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

மாலை 4:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. தீபாராதனை, புஷ்பாபிஷேகம் இரவு அத்தாழ பூஜைக்கு பின் 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்றது.

இனி மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச.,30 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று வேறு பூஜைகள் எதுவும் கிடையாது. டிச.,31 அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் மகர விளக்கு கால நெய்யபிஷேகம் தொடங்கும்.






      Dinamalar
      Follow us