அக் 04, 2013 12:00 AM
அக் 04, 2013 12:00 AM
ஐக்கிய நாடுகள் சபையோடு இணைந்த உலக வங்கி ஆரம்பிக்கப்பட்டு 69 வருடங்கள் ஆகிறது. உலக நாடுகள் தங்களை வளர்த்துக்கொள்ள கடனுதவிகளை உலக வங்கி அளித்து வருகிறது. குறிப்பாக ஏழை நாடுகள் தங்களை வளப்படுத்திக்கொள்ள நிபந்தனைகளுடன் கூடிய கடன் உதவித் திட்டங்களை அளித்து வருகிறது.
உலக வங்கி மற்ற வங்கிகளைப் போன்று செயல்படுவதில்லை. வணிக நோக்கத்தை தவிர்த்து வறுமையை குறைப்பதைம், வளர்ச்சியை அதிகரிப்பதையும் நோக்கமாகக்கொண்டு செயல்படுகிறது.
பணி வாய்ப்புகள்
ஜூனியர் புரொஃபசனல் அசோசியேட், தொழில்நுட்பவியலாளர்கள், ஒப்பந்த ஆலோசனைதாரர் போன்று பல்வேறு பணி வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு துறை சார்ந்தும் பணியாளர்கள் பணி செய்கிறார்கள். குறிப்பாக நீர், விவசாயம் மற்றும் கட்டுமானத் துறை சார்ந்த வல்லுநர்களுக்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது.
தேர்ந்தெடுக்கும் முறை
சில குறிப்பிட்ட பதவிகளுக்கு உலக வங்கி நிறுவனமே தனிப்பட்ட முறையில் ஆட்களை பணி அமர்த்துகிறது. அவை தவிர பெரும்பாலான வேலைகள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ஆட்களை தேர்வு செய்கிறார்கள்.
பணிச்சூழல்
அதிகம் பயணம் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
ஊதியம்
நாம் எந்த மாதிரியான ஓப்பந்தத்தில் கையெழுத்து செய்திருக்கிறோமோ அதன் படி ஊதியம் வழங்கப்படும் மற்றும் அனுபவம், தகுதி ஆகியவற்றை பொருத்தும் ஊதியம் மாறுபடும். மேலும், ஓப்பந்த காலத்திற்கு ஏற்றவாறு தினசரி அல்லது மாத சம்பளமாக வழங்கப்படும்.
தகுதி
பணிக்கு தகுந்தவாறு தகுதிகள் மாறுபடும். பொதுவான தகுதிகளாக ஆங்கில மொழித் திறன் சிறப்பாக இருக்க வேண்டும். கூடுதலாக அரபிக், சீனம், பிரெஞ்சு, போர்ச்சுகீசிய மொழி, ருஷ்ய மொழி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் ஏதெனும் தெரிந்திருந்தால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
கல்வித் தகுதியைப் பொறுத்தவரையில் முது நிலைப் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொதுநலம், சுகாதாரம், பொருளாதாரம், உணவு, சமூக அறிவியல் போன்றவற்றை ஆரய்ந்து முடிவுகளை எடுக்கக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
தகவல் பரிமாற்றங்கள் இணையம் வழியாக நடப்பதால் தொழில்நுட்பங்களை திறம்பட கையாள்பவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
உலக வங்கி ஆண்டுதோறும் மிக அதிக அளவு எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை கையாள்கிறது. எந்த பதவிகளுக்கு விளம்பரம் செய்திருந்தார்களோ அந்த பதவிக்கு மட்டுமே ஆட்களை தேர்வு செய்கிறார்கள். மேலும் உலக வங்கி இணையதளம் வழியாக அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள்.
