sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

சமஸ்கிருத படிப்புகள்

/

சமஸ்கிருத படிப்புகள்

சமஸ்கிருத படிப்புகள்

சமஸ்கிருத படிப்புகள்


ஏப் 14, 2022 12:00 AM

ஏப் 14, 2022 12:00 AM

Google News

ஏப் 14, 2022 12:00 AM ஏப் 14, 2022 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லியில் உள்ள ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பி.எட்., எம்.எட்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சிறப்பு சட்டத்தீன் கீழ், இப்பல்கலைக்கழகம் மத்திய பல்கலைக்கழகமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படிப்புகள்: 
சிக்‌ஷா சாஸ்திரி - பி.எட்., சிக்‌ஷா ஆச்சார்யா - எம்.எட்., வித்யவரிதி - பிஎச்.டி., பாரம்பரிய பாடப்பிரிவுகள், எஜுகேஷன் மற்றும் யோகா 
தகுதிகள்:
பி.எட்., படிப்பிற்கு சாஸ்திரி - பி.ஏ., சமஸ்கிருதம் அல்லது ஆச்சார்யா - எம்.ஏ., சமஸ்கிருதம் படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 20 வயதிற்குள் குறையாமல் இருக்க வேண்டும். 
எம்.எட்., படிப்பிற்கு, இளநிலை பட்டப்படிப்பில் சிக்‌ஷா சாஸ்திரி- பி.ஏ., சம்ஸ்கிருதம் மற்றும் சிக்‌ஷா சாஸ்திரி -பி.எட்., படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 22 வயதிற்குள் குறையாமல் இருக்க வேண்டும்.
பிஎச்.டி., படிப்பிற்கு துறை சார்ந்த எம்.ஏ., படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
அனைத்து படிப்புகளிலும் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., ஆகிய பிரிவினர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் விலக்கு அளிக்கப்படும்.
தேர்வு முறை: 
பல்கலைக்கழகம் நடத்தும் பிரத்யேக நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. ஜே.ஆர்.எப்., தேர்ச்சி அடைந்த மாணவர்கள் பிஎச்.டி., படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
பல்கலைக்கழகத்தின் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 
விபரங்களுக்கு:
www.slbsrsv.ac.in 






      Dinamalar
      Follow us