அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் நேர்முக தேர்வு வெற்றி பெற்ற மாணவியருக்கு பணி நியமன ஆணை
அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் நேர்முக தேர்வு வெற்றி பெற்ற மாணவியருக்கு பணி நியமன ஆணை
UPDATED : மே 02, 2026 04:15 PM
ADDED : மே 02, 2026 04:16 PM
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நேர்முக தேர்வு நடத்தியது. இதில், 30க்கும் மேற்பட்ட மாணவியர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்து, 30க்கும் மேற்பட்ட மாணவியருக்கு, பணி நியமன ஆணைகளை வழங்கி, வேலை-வாய்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
நேர்முக தேர்வில் தேர்வான மாணவியரை, அதியமான் கல்வி குழும தலைவர் தம்பிதுரை எம்.பி., மற்றும் செயலாளர் டாக்டர் லாசியா தம்-பிதுரை மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர் சுரேஷ் பாபு, அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி டீன் வெங்கடேசன் செல்வம், முதல்வர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் ரங்கநாத், மேலாளர் நாராயணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

