தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
UPDATED : மார் 20, 2026 05:33 PM
ADDED : மார் 20, 2026 05:35 PM
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பில், 2 பேர் தேசிய ஊரக திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஜன., 10ல், தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வு தேர்வு நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் பிப்., 19ம் தேதி வெளியிடப்பட்டது.
மதிப்பெண்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் தரவரிசையில் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி, 8ம் வகுப்பு மாணவன் ஸ்ரீசரவணன், மாணவி ஞானஸ்ரீ ஆகியோர் உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, 9 முதல், 12ம் வகுப்பு வரை மாதந்தோறும் ஆயிரம் என, மொத்தமாக, 48 ஆயிரம் ரூபாய் அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படும்.
உதவித்தொகை பெற தகுதி பெற்ற மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், நல்லாசிரியர் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பொதுமக்கள் பாராட்டினர்.
