sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஏமாற்றுகிற சராசரி அரசு; ஜாக்டோ - ஜியோ கடிதம்

/

ஏமாற்றுகிற சராசரி அரசு; ஜாக்டோ - ஜியோ கடிதம்

ஏமாற்றுகிற சராசரி அரசு; ஜாக்டோ - ஜியோ கடிதம்

ஏமாற்றுகிற சராசரி அரசு; ஜாக்டோ - ஜியோ கடிதம்


UPDATED : ஜன 22, 2024 12:00 AM

ADDED : ஜன 22, 2024 09:56 AM

Google News

UPDATED : ஜன 22, 2024 12:00 AM ADDED : ஜன 22, 2024 09:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கோரிக்கைகளை பரிசீலித்து, நல்ல முடிவை அறிவிக்காவிட்டால், போராட்டக் களத்தில் நிற்பது தவிர்க்க இயலாது என, அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அமைப்பு, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததால், எங்களின் பொறுமை சுக்கு நுாறாகி விட்டது. எதிர்க்கட்சியினர் எங்களை இளக்காரப்படுத்தியும், உங்களை தலை மேல் வைத்து கொண்டாடியதை சிறுமைப்படுத்தியும் பேசி வருகின்றனர்.தங்கள் அரசும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஏமாற்றுகிற சராசரி அரசாக இருப்பது, வேதனை அளிக்கிறது. எங்களுக்காக எங்களுடன் நின்று போராடிய நீங்களே, எங்கள் நியாயங்களை புரிந்து கொள்ள மறுப்பது துரதிருஷ்டவசமானது.உரிமைகள் தர மறுக்கும் இடங்களில், போராட்டங்களை கையில் எடுப்பதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியில்லை. பல கட்ட போராட்டங்களை நடத்திய பின்னும், முதல்வர் எங்களை அழைத்து பேசாததும், கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராததும், எங்களை போராட்டத்திற்கு தள்ளியுள்ளது.எங்களை அழைத்து, எங்கள் கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றையேனும் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. இயலாதபட்சத்தில் நாங்கள் போராட்டக் களத்தில் நிற்பது தவிர்க்க இயலாதது ஆகிவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us