sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது தமிழக நிதித்துறை செயலாளர் சொல்கிறார்

/

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது தமிழக நிதித்துறை செயலாளர் சொல்கிறார்

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது தமிழக நிதித்துறை செயலாளர் சொல்கிறார்

பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது தமிழக நிதித்துறை செயலாளர் சொல்கிறார்


UPDATED : பிப் 19, 2024 12:00 AM

ADDED : பிப் 19, 2024 02:18 PM

Google News

UPDATED : பிப் 19, 2024 12:00 AM ADDED : பிப் 19, 2024 02:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழகத்தில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இது தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது என நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.பட்ஜெட் குறித்து நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் அளித்த விளக்கம்:
 தமிழகத்தில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இது தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. தமிழக பொருளாதாரம் ஆரோக்கியமாக உள்ளது. இயற்கை பேரிடர்களால் தமிழகத்தின் வருவாய் குறைந்துள்ளது. நிவாரணத் தொகைக்காகவே அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத்துறை வருமானம் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு இல்லை.மத்திய அரசின் நிதி பகிர்வு, மானியம் குறைந்து கொண்டே வருகிறது 10வது நிதிக்குழுவின் போது 6.64 சதவீதமாக இருந்த நிதிபகிர்வு 15வது நிதிக்குழுவில் 4.08 சதவீதமாக குறைந்துள்ளது. வரி திரட்டுவதற்கான முயற்சிகளை கவனமாக கையாண்டு வருகிறோம். மோட்டார் வாகனம் மூலம் கிடைக்கும் வரி வருவாய் திருப்திகரமாக உள்ளது.இந்தாண்டு 15 சதவீதம் வணிக வரியில் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதற்காக போட்டி தேர்வு பயிற்சிக்காக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.






      Dinamalar
      Follow us