தமிழர்களை இணைக்கும் ஒற்றை அடையாளம் தமிழ்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தமிழர்களை இணைக்கும் ஒற்றை அடையாளம் தமிழ்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
UPDATED : பிப் 21, 2024 12:00 AM
ADDED : பிப் 21, 2024 04:41 PM
சென்னை:
உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ். தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?. தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ? எனப் பாவேந்தர் பாடியபடி தாய்த்தமிழ் காக்கும் மரபில் வந்தவர்கள் நாம்.பெயர்சூட்டலில், மேடைச் சொற்பொழிவுகளில், திரைப்பட உரையாடல்களில், அரசு ஆவணங்களில் என எல்லாத் தளங்களிலும் தமிழினைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று மீட்டு அதன் பழம்பெருமையை நிலைநாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்!. அத்தகைய இயக்கத்தின் வழிவந்த நமது அரசின் சார்பில், உலகத் தாய்மொழி நாளான இன்று, தமிழக சட்டசபையில் அன்னைத் தமிழை எந்நாளும் காத்து வளர்த்திட அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் உறுதியேற்றோம். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.