sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விரிவுரையாளர் காலியிடம் நிரப்ப கோரிய வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

/

விரிவுரையாளர் காலியிடம் நிரப்ப கோரிய வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

விரிவுரையாளர் காலியிடம் நிரப்ப கோரிய வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

விரிவுரையாளர் காலியிடம் நிரப்ப கோரிய வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்


UPDATED : ஆக 04, 2013 12:00 AM

ADDED : ஆக 04, 2013 10:04 AM

Google News

UPDATED : ஆக 04, 2013 12:00 AM ADDED : ஆக 04, 2013 10:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலர், சுப்புராஜ், தாக்கல் செய்த மனு: கடந்த, 2011, மே மாதம், சட்டசபையில், உயர் கல்வி அமைச்சர், "அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,120 காலியிடங்கள் உள்ளன; இவற்றை விரைந்து நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும்" என, அறிவித்தார்.

ஓராண்டுக்குப் பின், காலியிடங்கள் குறித்து, உயர் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. கல்வித் துறையின் திட்டப்படி, தேர்வு நடவடிக்கைகளை துவக்குவதற்குப் பதில், ஒரு குழுவை, கல்லூரி கல்வி இயக்குனரகம் அமைத்தது. காலியிடங்களை நிரப்ப, கல்லூரி நிர்வாகத்தையும் அனுமதிக்கவில்லை.

அவ்வப்போது ஓய்வு பெறுபவர்களும் அதிகரிப்பதால், காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்த கல்வியாண்டும் துவங்கி விட்டதால், தேர்வு நடவடிக்கைகளுக்கான அறிகுறி தென்படவில்லை. ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர்.

காலியிடங்களை முடிவு செய்ய, கல்லூரி கல்வி இயக்குனரகம் தான், தகுதி வாய்ந்தது. காலியிடங்களை முடிவு செய்து விட்டால், முன் அனுமதியின்றி, விளம்பரங்களை வெளியிட்டு, நியமனங்களை, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மேற்கொள்ளலாம்.

சட்டப்படி, அரசு விதிகளின்படி, நியமனங்கள் முடிந்த பின், பல்கலைக் கழகம் மற்றும் இணை இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். எனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள, காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதி அரிபரந்தாமன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் உயர் கல்வித்துறைக்கு, நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us