sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு இன்று நடக்கிறது

/

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு இன்று நடக்கிறது

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு இன்று நடக்கிறது

புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு இன்று நடக்கிறது


UPDATED : மார் 17, 2024 12:00 AM

ADDED : மார் 17, 2024 09:30 AM

Google News

UPDATED : மார் 17, 2024 12:00 AM ADDED : மார் 17, 2024 09:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:
அ... ஆ... இ... ஈ... படிக்கும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு இன்று(மார்ச் 17) நடக்கிறது.தமிழகத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்க வேண்டும் என்பதே வயது வந்தோர் கல்வி திட்ட முதன்மை நோக்கமாகும்.இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் 2023 செப்., முதல் படித்து வரும் அனைத்து கற்போருக்கும் இறுதி அடிப்படை எழுத்தறிவு தேர்வு நாளை (மார்ச் 17) நடக்கிறது. கற்போர் எழுத்தறிவு மையத்திலேயே இத்தேர்வு நடைபெறும்.அன்று காலை 10:00 மணிமுதல் மாலை 5:00 மணி வரை ஏதேனும் 3 மணி நேரத்திற்கு இத்தேர்வினை எழுதி காண்பிக்க வேண்டும். பயிற்சியாளரிடம் அ... ஆ... இ.... ஈ.... என எழுதி காண்பிப்பதோடு, அவர்கள் அளித்த அடிப்படை பயிற்சிகளில் இருந்து கேட்கும் வினாவிற்கும் விடை அளிக்க வேண்டும்.அரசு தேர்வுகள் போன்றே தேர்வு மையங்கள் ஏற்படுத்தி இத்தேர்வினை நடத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கற்போருக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் எழுத்தறிவு சான்று, தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us