sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசுப் பள்ளியின் படிகளில் அறிவியல், கணித பார்முலா

/

அரசுப் பள்ளியின் படிகளில் அறிவியல், கணித பார்முலா

அரசுப் பள்ளியின் படிகளில் அறிவியல், கணித பார்முலா

அரசுப் பள்ளியின் படிகளில் அறிவியல், கணித பார்முலா


UPDATED : டிச 10, 2024 12:00 AM

ADDED : டிச 10, 2024 10:16 AM

Google News

UPDATED : டிச 10, 2024 12:00 AM ADDED : டிச 10, 2024 10:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி:
சாயல்குடி அருகே கடுகுச்சந்தை அரசு உயர்நிலைப்பள்ளி படிக்கட்டுகளில் அறிவியல், பார்முலாக்கள் எழுதப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு செயல்படுகிறது. 83க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இங்கு இரண்டு மாடி கட்டடத்துடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன.

கட்டடத்தின் முதல் படி மற்றும் இரண்டாவது மாடிப்படிக்கு செல்லும் அனைத்து படிகளிலும் கணிதத்தில் உள்ள பார்முலாக்கள் ஒவ்வொரு படியிலும் பார்வையில் தெரியும்படி ஒட்டி வைத்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் ராஜேஷ் வின்சென்ட் ஜெய்சிங் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது:

அறிவியல் மற்றும் கணிதத்தில் உள்ள சூத்திரம், சமன்பாடுகள், குறியீடுகள் மற்றும் அளவீடுகள், அல்ஜிப்ரா உள்ளிட்டவைகளை எளிதில் மனப்பாடம் செய்வதற்கு ஏற்றபடி பார்வையில் படும்படி ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒட்டப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் படியில் ஏறும் போது இவ்வகையான சூத்திரங்களை மனப்பாடம் செய்து கொள்ளவும் வசதியாக இருக்கும்.

மதிய உணவு இடைவேளை நேரத்தில் தினமலர் நாளிதழின் பட்டம் மாணவர் இதழை ஒவ்வொரு மாணவருக்கும் வாசிப்பதற்கு கொடுக்கிறோம். இதன் மூலம் பள்ளி பாடப்புத்தகத்தையும் தாண்டி பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வகையான முயற்சிக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us