sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆசிரியருக்கு அழைப்பு

/

டில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆசிரியருக்கு அழைப்பு

டில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆசிரியருக்கு அழைப்பு

டில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆசிரியருக்கு அழைப்பு


UPDATED : ஜன 25, 2025 12:00 AM

ADDED : ஜன 25, 2025 11:23 AM

Google News

UPDATED : ஜன 25, 2025 12:00 AM ADDED : ஜன 25, 2025 11:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:
டில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள, மூணாறு பொறியியல் கல்லூரி உடல்கல்வி ஆசிரியருக்கு சிறப்பு அழைப்பு வந்துள்ளது.

கேரளா மாநிலம், பாலக்காடு பட்டிக்கரை நொச்சுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அனிஷ், 42. மூணாறு பொறியியல் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராகவும், என்.எஸ்.எஸ்., அலுவலராகவும் பணியாற்றுகிறார்.

இவரின் தலைமையில் தேசிய சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக, கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து, பஸ் வசதி இல்லாத இடமலையார்குடியில் உள்ள பரப்பையார் என்ற மலைகிராமத்துக்கு, தேவையான கட்டுமான பொருட்களை, 14 கி.மீ., தொலைவுக்கு நடந்தே கொண்டு சென்றனர். அப்பகுதி மக்களுக்கு கழிவறைகள் கட்டி கொடுத்துள்ளனர்.

இந்த செயல் குறித்து, கடந்த, 2016 அக்., 30ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு பாராட்டினார். இந்நிலையில், வரும் 26ம் தேதி டில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்கு, அனிஷ்க்கு சிறப்பு அழைப்பு வந்துள்ளது.






      Dinamalar
      Follow us