sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்விக்கொள்கை: தர்மேந்திர பிரதான்

/

தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்விக்கொள்கை: தர்மேந்திர பிரதான்

தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்விக்கொள்கை: தர்மேந்திர பிரதான்

தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்விக்கொள்கை: தர்மேந்திர பிரதான்


UPDATED : பிப் 17, 2025 12:00 AM

ADDED : பிப் 17, 2025 05:25 PM

Google News

UPDATED : பிப் 17, 2025 12:00 AM ADDED : பிப் 17, 2025 05:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்மேந்திர பிரதான் நிருபர்கள் சந்திப்பில், 'புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்க வேண்டும் என்பது விதி. அனைத்து மாநிலங்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏன் தமிழக அரசு மட்டும் ஏற்க மறுக்கிறது' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்திற்கு நிதி கிடையாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மத்திய அமைச்சர் கூறியதை கண்டித்து தி.மு.க., போராட்டமும் அறிவித்துள்ளது.

இது குறித்து இன்று (பிப்.,17) தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி:


புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன். தமிழகத்தின் மீது ஹிந்தி மொழியை திணிக்கவில்லை. மும்மொழி கொள்கையில் ஹிந்தி கட்டாயம் அல்ல. பிற இந்திய மொழிகளாக இருக்கலாம்.

தமிழ், ஆங்கிலம் தவிர 3வது ஆக இந்திய மொழி ஒன்றை கற்கக் கூறுகிறோமே தவிர, ஹிந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என கூறவில்லை. புதிய கல்விக் கொள்கை தாய் மொழிக்கு முக்கியத்துவம் தருகிறது. தமிழ் மொழி பழமையானது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பன்மொழி அம்சத்தை கற்பதால் என்ன தவறு? தமிழகத்தில் உள்ள சிலர் இதில் அரசியல் செய்கின்றனர்.

ஹிந்தியை திணிக்கவில்லை, ஆனால் புதிய கல்விக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் சிலர் அரசியல் செய்கின்றனர். புதிய கல்விக் கொள்கை பிரதமரின் கனவு திட்டம். இதனை செயல் படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us