sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ராணுவத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்

/

ராணுவத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்

ராணுவத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்

ராணுவத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்


UPDATED : மார் 25, 2025 12:00 AM

ADDED : மார் 25, 2025 11:20 PM

Google News

UPDATED : மார் 25, 2025 12:00 AM ADDED : மார் 25, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா:
வங்கதேச ராணுவம், அரசியலில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மாணவர்கள் தலைமையிலான புதிய அரசியல் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்ததால், அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதை தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் ஒன்றிணைந்து, தேசிய குடிமக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை கடந்த மாதம் துவக்கினர். இந்நிலையில், வங்கதேச அரசியலில் அந்நாட்டு ராணுவம் குறுக்கிடுவதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, தன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதன் விபரம்:

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை, இந்தியாவின் ஆதரவுடன் மறுசீரமைக்கப்பட்ட புதிய கட்சியாக களம் இறங்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இது தொடர்பாக கடந்த 11ம் தேதி எங்களை அழைத்து ராணுவம் பேச்சு நடத்தியது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து, டாக்கா பல்கலை வளாகத்திற்குள் தேசிய குடிமக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது பேசிய ஹஸ்னத் அப்துல்லா, ராணுவத்தினர் கன்டோன்மென்ட் உள்ளே இருந்து மட்டுமே தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும். நாட்டுக்குள் நுழைந்து அரசியலில் தலையிடக் கூடாது. அதை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம், என்றார்.

மாணவர் போராட்டத்தால் டாக்காவில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ராணுவம், பல்கலைக்குள் செல்லாமல் டாக்கா சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது.

யூனுசை சந்திப்பாரா மோடி?

இந்தியா, வங்கதேசம், பூட்டான், மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் அடங்கிய, 'பிம்ஸ்டெக்' எனப்படும், பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்க கடல் நாடுகளின் மாநாடு, ஏப்., 2 - 4 வரை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது அவரை சந்தித்து பேச்சு நடத்த, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் விரும்புவதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. இதற்கு, மத்திய அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை.






      Dinamalar
      Follow us