sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி செல்லாத குழந்தைகள் மீது கவனம் செலுத்த திட்டம்

/

பள்ளி செல்லாத குழந்தைகள் மீது கவனம் செலுத்த திட்டம்

பள்ளி செல்லாத குழந்தைகள் மீது கவனம் செலுத்த திட்டம்

பள்ளி செல்லாத குழந்தைகள் மீது கவனம் செலுத்த திட்டம்


UPDATED : ஜூலை 26, 2025 12:00 AM

ADDED : ஜூலை 26, 2025 10:41 AM

Google News

UPDATED : ஜூலை 26, 2025 12:00 AM ADDED : ஜூலை 26, 2025 10:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளில், 2025-26 கல்வியாண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் (எஸ்.எம்.சி.,) முதல் கூட்டம் நடைபெற்றது.

அனைத்து பள்ளிகளிலும் மாதம் ஒருமுறை, மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் பள்ளியின் ஒட்டுமொத்த மேம்பாட்டை நோக்கமாக கொண்டு எஸ்.எம்.சி., கூட்டம் கட்டாயம் நடத்த, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான முதல் கூட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்டது. இதில், மாணவர் வருகை, மாணவர் மதிப்பீடு, இடைநிறுத்தம், பள்ளி செல்லாத குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

கவுண்டம்பாளையம் ரங்கசாமி நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, காந்திமாநகர் அரசு உயர் நிலைப்பள்ளி, அரசூர், கல்வீரம்பாளையம், கண்ணம்பாளையம் ஆகிய பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளிலும் கூட்டம் நடைபெற்றது.

அரசூர் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில், பள்ளி வளாகத்திற்குள் மற்றும் சுற்றியுள்ள 100 மீட்டர் சுற்றளவிற்குள் போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிரான விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்ட தீர்மானிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us