பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. : ஐ.ஐ.டி. சென்னை அறிவிப்பு
பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. : ஐ.ஐ.டி. சென்னை அறிவிப்பு
UPDATED : செப் 30, 2025 09:53 AM
ADDED : செப் 30, 2025 09:54 AM

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி. மேலாண்மை துறை, பணிபுரிவோருக்கான சிறப்பு எம்.பி.ஏ. படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
இரண்டு ஆண்டுகள் கொண்ட இப்படிப்பு, பணிபுரிவோர் வசதிக்காக மாற்று வார இறுதிகளில் வகுப்புகளுடன் நடத்தப்படுகிறது. விண்ணப்பிக்க அக்., 19 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் https://doms.iitm.ac.in/admission/ அல்லது https://doms.iitm.ac.in/admission/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஏதேனும் ஒரு இளநிலை படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபரிச்சயம் கொண்டவர்கள் இந்த படிப்பிற்கு தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், நவ., 8 மற்றும் 9 தேதிகளில் ஐ.ஐ.டி. சென்னை வளாகத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்திற்குள் அறிவிக்கப்படும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு எம்.பி.ஏ. வகுப்புகள் 2026 ஜனவரி மாதத்தில் தொடங்கவுள்ளன.