sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இந்திய இளைஞர்களின் ரோபோட்டிக்ஸ் திறமைக்கு உலக அரங்கில் வாய்ப்பு

/

இந்திய இளைஞர்களின் ரோபோட்டிக்ஸ் திறமைக்கு உலக அரங்கில் வாய்ப்பு

இந்திய இளைஞர்களின் ரோபோட்டிக்ஸ் திறமைக்கு உலக அரங்கில் வாய்ப்பு

இந்திய இளைஞர்களின் ரோபோட்டிக்ஸ் திறமைக்கு உலக அரங்கில் வாய்ப்பு


UPDATED : அக் 13, 2025 08:12 AM

ADDED : அக் 13, 2025 08:13 AM

Google News

UPDATED : அக் 13, 2025 08:12 AM ADDED : அக் 13, 2025 08:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு இணைந்து இளைஞர்களுக்கான ரோபோட்டிக்ஸ் சவால் போட்டியை நடத்தியது.

புதுமை மற்றும் இளைஞர்கள் தலைமையிலான தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், புதுடில்லியின் யஷோபூமி இந்திய சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த போட்டி நேற்று மாலை நிறைவடைந்தது.

இந்த தேசிய அளவிலான சவால், உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற துறைகளில் ரோபோட்டிக்ஸ் அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்கும் இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்தியது. இதில் ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கான பரிசுகளும், புதுமையான முயற்சிகளுக்கான சிறப்பு அங்கீகாரங்களும் வழங்கப்பட்டன.

ஜூனியர் பிரிவில் பெங்களூருவின் பிளேட்டோ லேப்ஸைச் சேர்ந்த ஹேயான்ஷ் அணி முதலிடத்தைப் பெற்றது. அவர்கள் 2026 ஜூலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலகளாவிய இறுதிச் சுற்றில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர். சீனியர் பிரிவில் வாரணாசியைச் சேர்ந்த தி ஆம்பிஷியஸ் அவெஞ்சர்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வெற்றி பெற்றது. நாடு முழுவதும் 55 அணிகளில் இருந்து 271 பேர் பங்கேற்ற நிலையில், பல்வேறு சுற்றுகள் முடிவில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us