sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அ.தி.மு.க., பாசறை கூட்டத்தில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள்

/

அ.தி.மு.க., பாசறை கூட்டத்தில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள்

அ.தி.மு.க., பாசறை கூட்டத்தில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள்

அ.தி.மு.க., பாசறை கூட்டத்தில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள்


UPDATED : ஆக 05, 2013 12:00 AM

ADDED : ஆக 05, 2013 08:39 AM

Google News

UPDATED : ஆக 05, 2013 12:00 AM ADDED : ஆக 05, 2013 08:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: கல்வித்துறை அமைச்சர் பங்கேற்ற, அ.தி.மு.க., பாசறை ஆலோசனை கூட்டத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து வந்து பங்கேற்க செய்த சம்பவம், பெற்றோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில், அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. இதற்காக, நகர்மன்ற வளாகத்தில், பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டு இருந்தது.

கூட்டத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் தலைமை தாங்கியதால், புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர், சீருடையுடன் வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 2:00 மணி வரை கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு, கோழி பிரியாணி, தண்ணீர் பாக்கெட் மற்றும் டீ ஷர்ட் வழங்கப்பட்டன.

அரசியல் கட்சி கூட்டத்தில், மாணவர்களை பங்கேற்க செய்த சம்பவம், பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம், இதுகுறித்து, விளக்கம் கேட்க, பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us