sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மருத்துவ மாணவர் சேர்க்கை: முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு

/

மருத்துவ மாணவர் சேர்க்கை: முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு

மருத்துவ மாணவர் சேர்க்கை: முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு

மருத்துவ மாணவர் சேர்க்கை: முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு


UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM

ADDED : ஜூன் 23, 2014 09:59 AM

Google News

UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM ADDED : ஜூன் 23, 2014 09:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு இம்மாதம் 18ம் தேதி தொடங்கியது. 19 அரசுக் கல்லூரிகளில் உள்ள 2,023 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 85 பி.டி.எஸ். இடங்களுக்கும் கலந்தாய்வு நடந்தது.

இரண்டு நாட்களிலேயே பெரும்பாலான அரசுக் கல்லூரிகளில் முக்கிய இடங்கள் நிரம்பின. அதன்பின், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள், ஏழு சுய நிதி கல்லூரிகளில் இருந்து மாநிலத்திற்கு கிடைத்த 498 இடங்களுக்கும் கலந்தாய்வு நடந்தது.

முதற்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிந்தது. 3,500 மாணவர்கள் பங்கேற்றனர். 2,521 பேர் எம்.பி.பி.எஸ்; 85 பேர் பி.டி.எஸ். இடங்களையும் தேர்வு செய்தனர். முதற்கட்ட கலந்தாய்வில் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன.

மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறியதாவது: அரசு கல்லூரிகளில் அனுமதி பெற உள்ள 175 இடங்கள், பிற சுயநிதி கல்லூரிகளில் இருந்து மாநிலத்திற்கு கிடைக்கும் இடங்களுக்கும் சேர்த்து ஜூலை 2ம் வாரத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்.

காலியாக உள்ள இடங்கள், கலந்தாய்வு விவரங்கள் tnhealth.org என்ற,இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us