மாணவர்கள் களப்பணி ஆற்றினால் மார்க்குகளை அள்ளித்தருகிறது தேர்வுத்துறை
மாணவர்கள் களப்பணி ஆற்றினால் மார்க்குகளை அள்ளித்தருகிறது தேர்வுத்துறை
UPDATED : நவ 26, 2023 12:00 AM
ADDED : நவ 26, 2023 10:26 AM
அ நிறம் | அளவு
சென்னை:
மரம் வளர்த்தல், சாரணர் இயக்கம் போன்றவற்றில் சேரும் மாணவர்களுக்கு பொது தேர்வின் போது மார்க்குகளைஅள்ளித்தர தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.பொது தேர்வு எழுதும் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அவர்களின் களப்பணியை ஊக்குவிக்கும் வகையில் பொது தேர்வில் மார்க்குகளை அள்ளித்தர வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது. இதன் படி மாணவர் ஒருவர் 80 சதவீதம் வருகை பதிவு கொண்டிருந்தால் 2 மார்க். மரம் வளர்ப்பு, இலக்கிய மன்றம், சாரணர் இயக்கம் உள்ளிட்ட 33 செயல்பாடுகளில் குறைந்த பட்சம் ஏதேனும் 3 செயல்பாடுகளில் தங்களை ஈடுபட்டிருத்தல் வேண்டும். இவைகளுக்கு 2 மார்க் அளிக்கப்படும். களப்பணிகளுக்கு 3 மார்க்குகள் வழங்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.
